இந்தியா முழுவதும்... பள்ளி, கல்லூரிகள் 'மீண்டும்' எப்போது திறக்கப்படும்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

Advertising
Advertising

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. நாளுக்குநாள் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பதற்கு இப்போது வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்த கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், '' இதுகுறித்து எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்