VIDEO: எப்பா...! ‘விட்டா பந்துக்கு மேல பறந்துபோய் பிடிப்பாரு போல’.. மிரளவைத்த கேட்ச்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பறந்து கேட்ச் பிடித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

14-வது ஐபிஎல் சீசனின் 7-வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியும் மோதுகின்றன. இந்த இரு இளம்வீரர்களும் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக கேப்டானாக அறிமுகமாகியுள்ளனர்.

இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இப்போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முதல் போட்டியை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இதில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி நழுவவிட்டது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி பேட்டிங் செய்து வருகின்றது.

தொடக்க ஆட்டக்காரரான ப்ரீத்வி ஷா 2 ரன்னில் அவுட்டாக, அடுத்து ஷிகார் தவானும் 9 ரன்னில் அவுட்டாகினார். இதில் தவான் அடித்த பந்தை விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன், டைவ் அடித்து ஒரு கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்