'சச்சினுக்கு கொரோனா பாதிப்பு'... 'மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள கட்டாயம்'... ட்விட்டரில் சச்சின் வெளியிட்டுள்ள பதிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சச்சினுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவரே உறுதி செய்துள்ளார்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டு அதன் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 2-வது அலை மற்றும் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மராட்டியம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதில், ''சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டில் தனிமையில் உள்ளேன்.

எனது குடும்பத்தினருக்குப் பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்''. என சச்சின் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சமீபத்தில் நடைபெற்ற சாலை விழிப்புணர்வு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஜாம்பவான் அணிக்கு தெண்டுல்கர் கேப்டனாக பங்கேற்றார்.

இதில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்றன. இதனால் அந்த போட்டியில் பங்கேற்ற மற்ற வீரர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ராய் பூரில் நடந்த இந்த போட்டியில் ரசிகர்களும் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்