'மனைவியை 300 துண்டுகளாக வெட்டி... டிபன் கேரியரில் போட்டு... 70 வயது முதியவர் செய்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனது மனைவியை 300 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்த ஓய்வு பெற்ற ராணுவ மருத்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே வசித்து வந்தவர், சோம்நாத் பரிதா. இவர் இந்திய ராணுவத்தில் மருத்துவராக பணி புரிந்து ஓய்வு பெற்றவராவார். இவருக்கும் தன்னுடைய மனைவி உஷாஸ்ரீ சமலுக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சோம்நாத், கடந்த 2013ம் ஆண்டு தன்னுடைய மனைவியை 300 துண்டுகளாக வெட்டி, டிபன் கேரியர்களில் போட்டு வைத்துள்ளார்.

இந்த சம்பவம் நீண்ட நாட்களாக வெளிச்சத்துக்கு வராமல் இருந்த நிலையில், உஷாவின் தம்பி இதனை வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, கொலை செய்த முன்னாள் ராணுவ மருத்துவர் சோம்நாத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து அம்மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆயுள் தண்டனை பெறவிருக்கும் சோம்நாத்துக்கு வயது 78 என்பது குறிப்பிடத்தக்கது.

CRIME, HUSBAND, WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்