ஒரு வழியா பொன்னியின் செல்வன் பார்த்த அஸ்வின்.. படத்த பாத்துட்டு வியப்பில் அவரே சொன்ன விஷயம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே தற்போது டி 20 தொடர் நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

இந்த தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி 20 போட்டி, இன்று (02.09.2022) அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் வைத்து நடைபெற உள்ளது.

இதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன் குவாஹாத்தி சென்று தீவிர பயிற்சியிலும் இரு அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியன்று, பொன்னியின் செல்வன் நாவல் தொகுப்பை அடிப்படையாக கொண்டு பிரபல இயக்குனர் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இருந்தது.

மேலும், உலக அளவில் இந்த திரைப்படம் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறது. இதனிடையே, டி 20 தொடரில் இடம்பெற்றுள்ள அஸ்வின், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க விரும்பி உள்ளார். ஆனால், குவஹாத்தியில் இருப்பதால் தமிழில் எங்கே பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது என சமீபத்தில் கேள்வி ஒன்றை ட்விட்டரில் எழுப்பி இருந்தார்.

இதற்கு ரசிகர் ஒருவர், குவஹாத்தியில் பொன்னியின் செல்வன் ஓடும் விவரத்தை கமெண்ட் செய்திருந்தார். ஆனால், அந்த சமயத்தில் பயிற்சி இருப்பதால் படத்திற்கு செல்வது கடினமான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படம் பார்த்த அஸ்வின், தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படம் பற்றி அஸ்வினின் ட்வீட்டில், "இன்னும் எத்தனை முறை இந்த காவியத்தின் மீது நான் காதலில் விழ போகிறேன் என எனக்கு தெரியவில்லை. ஒரு சிறந்த நாவலை திரைப்படங்களால் மாற்ற முடியாது. இருப்பினும் லெஜண்ட் மணிரத்னம் இதனை நிச்சயம் பார்க்க வைக்கக் கூடிய வகையில் உருவாக்கி உள்ளார்.

இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் பலர், அற்புதமான கதாபாத்திரங்களுக்கு இன்னும் ஆழம் சேர்த்துள்ளனர். எனது தலையில் வாழ்ந்து வந்த அவற்றிற்கு அனைவரும் உயிர் கொடுத்துள்ளனர்" என குறிப்பிட்டு படத்தில் நடித்தவர்களையும் டேக் செய்துள்ளார் அஸ்வின்.


முன்னதாக, எப்படியாவது பொன்னியின் செல்வன் பார்க்க வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டு வந்த அஸ்வின், கடைசியில் படத்தையும் பார்த்து வியந்து போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

RAVICHANDRAN ASHWIN, PONNIYIN SELVAN, MANIRATNAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்