"பிஞ்சு வயசுங்க,, படுபாவி இப்டி பண்ணிட்டானே"... 'பள்ளி' வளாகத்தில் வைத்து... 'ஐந்து' வயது சிறுமிக்கு நடந்த 'கொடூரம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தான் மாநிலம் பரன் என்னும் மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாவீர் என அடையாளம் காணப்பட்ட அந்த கயவன், அங்குள்ள பள்ளி வளாகம் ஒன்றில் வைத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட போது, அந்த நபர் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வயது சிறுமி தனது தாயாரிடம் தனது உடலின் நிலை குறித்து கவலைப்பட்ட போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் காரணமாக பதறிப் போன சிறுமியின் குடும்பத்தினர், அவரை உடனடியாக அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீசார் தரப்பில், 'இந்த கொடூர செயல் தொடர்பாக நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். மேலும் அந்த கொடுமை நடந்த இடத்தையும் பரிசோதனை செய்துள்ளோம். அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்