Rahul Gandhi : “ராகுலுடன் அமர்ந்திருக்கும் பெண் இவங்களா..?” - யாத்திரையின்போது வைரலான ஃபோட்டோ.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் தற்போது  பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை  150 நாட்களுக்கு இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு விநியோகம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. உபி அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!

கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி, கடந்த 11-ம் தேதி முதல், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களைத் தொடர்ந்து ஆலப்புழா என தன் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.  பின்னர் புன்னமடகாயலில் வள்ளம்களி என்ற படகுப் போட்டியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி போட்டியாளர்களுடன் சேர்ந்து துடுப்பு போட்டார். ராகுல் அணி இறுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, அவருக்கு கோப்பை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, “பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடதுசாரித் தலைவர்கள் ஆதரவு தருவது என்பது நிச்சயம் ஒரு தனிமனித ஆதரவு கிடையாது. அவர்கள் ஆதரிப்பது ஒரு கருத்தைதான். இந்த யாத்திரையை பொறுத்தவரை முதலில் காரில் மேற்கொள்ளலாம் என பேசப்பட்டது. ஆனால் கார் யாத்திரை என்றால் வேண்டாம் என நான் மறுத்தேன். காரில் போக முடியாத ஆயிரக்கணக்கான மக்கள் உள்ள நாட்டில் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடைப்பயணத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் ராகுல் காந்தியுடன் வளரிளம் பெண் ஒருவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நெட்டிசன்கள் பலரும், யாரு இவங்க, முன்னாள் பிரதமரின் மகனுடன் இவ்வளவு சகஜமாக அமர்ந்திருக்கிறார்? இவர் ராகுல் காந்தியின் கட்சியை சேர்ந்தவரா? இல்லை குடும்பத்தை சேர்ந்தவரா? என்றெல்லாம் கேள்விகளை கேட்டு வந்தனர்.

ஆம், தற்போது வைரலாகும் அந்த ஃபோட்டோவில் ராகுல் காந்தியுடன் இருக்கும் அந்த வளரிளம் பெண், ராகுல்காந்தியின் தங்கையான பிரியங்கா வத்ராவின் மகள் மிராயா வத்ரா என்கிற தகவல் உறுதிபட பலராலும் முன்வைக்கப்பட்டுவருகிறது. மேலும் இந்த ஃபோட்டோ, இப்போது யாத்திரை நேரத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்றும் பலர் கூறி வருகின்றனர். அதன்படி, முன்னதாக கடந்த  2015 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 71ஆம் பிறந்தநாள் விழா அவரது நினைவிடத்தில் நினைவேந்தல் நடந்தது.

அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட  இந்த ஃபோட்டோவில் ராகுல்காந்தியின் அருகில் இருப்பவர் அவரது மருமகள் மிராயா  என்பதை பலரும் உறுதி செய்துள்ளனர்.

Also Read | "பசியோட யாரும் இருக்கக்கூடாது".. ஏழை மக்களுக்கு இலவச உணவு.. உலகத்தையே திரும்பி பார்க்க வச்ச துபாய் அரசர்..!

RAHUL GANDHI, PRIYANKA GANDHI, PRIYANKA GANDHI DAUGHTER, PRIYANKA GANDHI DAUGHTER MIRAYA VADRA, RAHUL GANDHI WITH PRIYANKA GANDHI DAUGHTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்