எந்த ஒரு பிள்ளைக்கும் 'இப்படி' நடக்க கூடாது...! 'இந்த நாடே உங்க கூட இருக்கு...' - ஷாருக்கானுக்கு ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தி ஷாருக்கானுக்கு ஆறுதல் கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர்.

அதோடு, கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் மும்பை ஆர்த்தர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யன் கான் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பல முறை ஆர்யன் சார்பாக ஜாமீன் மனு விண்ணப்பிக்கப்பட்டும் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி பல நிபந்தனைகளுடனும் ஆர்யன் கானுக்கு தனி நபர் உத்திரவாதத்துடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆர்யன் கான் வெள்ளிக்கிழமைதோறும் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதோடு நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்பவை முக்கிய நிபாத்தனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஷாருக்கானுக்கு ஆறுதல் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் 'இந்த நாடே உங்களுடன் உள்ளது, எந்த ஒரு குழந்தைக்கும் இதுபோல் நடக்க கூடாது' என ராகுல் காந்தி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RAHUL GANDHI, ARYAN KHAN, SRK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்