Video: இனி அவன் 'எனக்கு' மகன் கெடையாது.. அந்த பொண்ணு மாதிரி.. அவனையும் எரிச்சு கொல்லுங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் நால்வரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நான்கு குற்றவாளிகளில் ஒருவரான சென்ன கேசவலுவின் தாயார் தன்னுடைய மகனை எரித்து கொல்லுங்கள் என பேட்டி அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''என்னுடைய மகன் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால், அந்த பெண் போலவே அவனையும் எரித்து கொலை செய்யுங்கள். அல்லது சுட்டு கொல்லுங்கள். இல்லை என்றால் அவனை தூக்கில் போடுங்கள்.

அவன் ஒரு மிருகம் என்னுடைய மகன் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரு தாயின் மகள் இல்லையா? நான் இன்று மிகவும் கஷ்டப்படுகிறேன். அந்த பெண்ணின் தாயார் மனநிலையை என்னால் உணர முடிகிறது,'' என தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் நால்வரையும் பொதுவாக தூக்கில் போடுமாறு கோரிக்கை விடுத்து, பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்