ஏர்போர்ட்டில் திடீரென மயங்கி விழுந்து 'இறந்த' முதியவர்... அவரோட தானே 'பிளைட்'ல வந்தோம் பயணிகள் அதிர்ச்சி... பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான 'உண்மை'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த முதியவரின் மரணத்துக்கான காரணம் வெளியாகி இருக்கிறது.

கர்நாடகா மாநிலம் கெம்பகவுடா பகுதியில் உள்ள விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமானம் ஒன்று வந்து தரையிறங்கியது. அதில் பயணம் செய்த முதியவர் ஒருவர் விமான நிலையத்தின் வரவேற்பு பகுதிக்கு வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அவருடன் பயணம் செய்த பயணிகள் மட்டுமின்றி அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் அவரை சோதனை செய்தபோது அவர் இறந்து போனது தெரிய வந்தது. அவருக்கு கொரோனா இருந்ததால் தான் மயங்கி விழுந்து இறந்து போனார் என்றும் சக பயணிகள் அச்சத்துடன் பேசிக்கொண்டனர். இதையடுத்து முதியவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் முதியவர் மாரடைப்பால் இறந்து போனதாக தகவல் வெளியாகி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்