என் மனைவிக்கு 'பாய் பிரண்ட்' தேவை.. வீடியோக்கள் போட்டு.. பெங்களூரு கணவன் செய்த 'WIFE SWAP'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவை போன்று பெங்களூரிலும் இளைஞர் ஒருவர் தனது மனைவியை பாலியல் ரீதியாக பிற ஆண்களுடன் பகிர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

கேரளா

கேரள மாநிலம் கோட்டயம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 14க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்களில் ஆண்கள் தங்களது மனைவிகளை பகிர்ந்துகொண்டு பணம் சம்பாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. Wife Swap என்ற குழு இயங்கி வந்ததும் தெரியவந்தது. விசாரணையில், பல விஐபிக்கள், அரசு அதிகாரிகள் தங்களது மனைவிகளை பகிர்ந்து கொண்டது தெரியவந்தது. இந்நிலையில், 27 வயது பெண் ஒருவர் தன்னை பிற ஆண்களுடன் தனது கணவர் பிற ஆண்களுடன் உறவு கொள்ள வற்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தம்பதிகள்

கேரள போலீசார் விசாரணையின் முடிவில் Wife Swap என்ற குழு இயங்கி வந்ததும், இந்த குழுவில் 1000-க்கும் மேற்பட்ட தம்பதிகள் இயங்கி வந்துள்ளனர். மனைவியை பகிர்ந்து கொள்வது, குழு பாலியல் உறவு மேற்கொள்வது, தனது மனைவியை பிற ஆண்கள் பாலியல் உறவு கொள்வதை வேடிக்கை பார்ப்பது என்று பெரிய கும்பலே இந்த குழுவில் இயங்கி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இதுதொடர்பான விசாரணை கேரளாவில் நடைபெற்று வருகிறது.

கணவன் - மனைவி கைது

இந்நிலையில், கேரளாவை போன்று பெங்களூரிலும் Wife Swap சம்பவம் நடந்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  வினய் குமார் (32), அவரது மனவைியையும் காவல்துறையினர் கைது செய்தனர். பெங்களூர் சிங்காசந்திராபகுதியில் இவர்கள் வசித்து வந்தனர். இருவரும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில்,  குமாருக்கு தனது மனைவி வேறு ஆண்களுடன் பாலியல் உறவு கொள்வதை பார்க்க விருப்பப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது மனைவியிடம் தெரிவித்திருக்கிறார். இதற்கு அவரது மனைவியும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Wife Swap

இதனைத்தொடர்ந்து வினய் குமார்  தனது மனைவிக்கு  பாலியல் உறவு கொள்வதற்கு ஏற்ற பார்ட்னர் தேடும் பணியில் குமார் இறங்கினார்.  இதையடுத்து ட்விட்டரில் பொய்யான பெயரில் கணக்கு உருவாக்கி, நாங்கள் பெங்களூரில் வசித்து வருகிறோம். எனது மனைவியுடன் உறவு கொள்ள விரும்பும் நபர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்து சில ஆண்கள் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். பின்பு அவர் தனது மனைவியின் ஆபாச  புகைப்படங்கள், வீடியோக்களை டெலிகிராமில் அந்த ஆண்களுக்கு அனுப்பி உள்ளார்.

போலீசிடம் சிக்கிய கும்பல்

அந்த இளைஞர்களை வீட்டிற்கு அழைத்து தனது மனைவியுடன் பாலியல் உறவு கொள்ள குறிப்பிட்ட தொகையை வாங்கி கொண்டு அனுமதித்துள்ளா். இதேபோன்று பல ஆண்களை வீட்டிற்கு அழைத்து தனது மனைவியுடன் உடலுறவு கொள்ள அனுமதித்து வந்துள்ளார். இதனிடையே, ட்விட்டர் பயனாளி ஒருவர் இதுகுறித்து பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்பு தம்பதிகள் இருவரையும் போலீசார் கைது செய்து  67 மற்றும் 67A சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

BENGALURE, YOUTH ARRESTED, WIFE SWAPPING, POLICE INVESTIGATION, BENGALURU POLICE, TWITTER, ONLINE SALE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்