'இரவில் சைலண்டாக சாதனை படைத்த இந்தியா'!.. அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் பிரித்வி ஏவுகணை சோதனை!.. வெளியான பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் பிரித்வி 2 ஏவுகணையை இரவில் செலுத்தி இந்தியா சோதனை செய்துள்ளது.

இந்தியா தயாரித்துள்ள பிரித்வி 2 ஏவுகணை 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றது. ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்கரையில் இருந்து புதன் இரவில் இந்த ஏவுகணையைச் செலுத்திச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனை இரவில் ஏவுகணை செலுத்தும் திறனைச் சோதிப்பதற்காக இது மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏவுகணை சென்ற பாதையை ராடார் மூலம் கண்காணித்ததில் குறித்த இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்