VIDEO: 'பிரேக்கிங் நியூஸ்ல என் ஃபோட்டோ, என் பேரா?'... 'நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்!!'... நேரலையில் செய்தி வாசிப்பாளருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண் செய்தி வாசிப்பாளர், தான் விருது வாங்கப் போவதாக வந்த செய்தியை, நேரலையில் வெட்கப்பட்டு வாசிக்க தயங்கிய சம்பவம் காண்போரை சிலிர்க்க வைத்துள்ளது.

கேரள மாநிலம், மாத்ருபூமி செய்தி நிறுவனத்தில் தலைமை உதவி ஆசிரியராக பணி புரிபவர், ஸ்ரீஜா. அவர் வழக்கம் போல், நேற்று காலை தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, கேரள மாநிலத்தின் ஊடக விருதுகள் குறித்த செய்தி வெளியாகியது. அதில் அவருக்கும் விருது வழங்கப்பட உள்ள செய்தியைக் கண்டு, சில விநாடிகள் அதிர்ச்சியில் உறைந்தார். தன்னுடைய பெயரை, தானே வாசிக்க அவர் வெட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஸ்ரீஜாவுக்கு விருது கிடைத்திருக்கும் செய்தியை, அலுவலக நண்பர்கள் அவருக்கு தெரியாத வண்ணம் மறைத்து, இன்பே அதிர்ச்சி அளித்துள்ளனர்.

KERALA, NEWSREADER, AWARD, SURPRISE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்