“பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டாங்க”.. மனைவியை ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிச் சென்ற கணவன்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தி கணவர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

கேரள மாநிலம் ஆலப்புழா அடுத்த சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் அப்புக்குட்டன் (வயது 50). நாட்டு சித்த வைத்தியரான இவருக்கும், ஹேனா (வயது 41) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது அப்புக்குட்டனுக்கு பெண் வீட்டார் 75 சவரன் நகையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி தனது மனைவி ஹேனா குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறி அப்புக்குட்டன் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு ஹேனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ஹேனாவின் தலையில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் ஹேனாவின் தலை மற்றும் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அப்புக்குட்டனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்குள் அப்புக்குட்டன் மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியை அடிக்கடி துன்புறுத்தியுள்ளார். இதனை செல்போன் மூலம் ஹேனா தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே பெற்றோர் வந்ததும் ஹேனாவிடம் அன்பைப் பொழிவது போல் அப்புக்குட்டன் நடித்துள்ளார். இதனை நம்பிய ஹேனா பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்தும் செல்ல மறுத்த ஹேனா கணவருடனே இருந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஹேனாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரது தலையை பிடித்து பல முறை தரையில் அப்புக்குட்டன் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஹேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை மறைப்பதற்காக குளியலறையில் மனைவி வழுக்கி விழுந்து விட்டதாக அப்புக்குட்டன் நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து அப்புக்குட்டன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக சமீபத்தில் இளம் பெண்கள் சிலர் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், வரதட்சணை கேட்டு மனைவியை கணவர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

KERALA, HUSBAND, WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்