'காசு அனுப்பு...' இல்ல உன் 'அந்த' வீடியோவ நெட்ல லீக் பண்ணிடுவேன்...! 'பெண்ணின் நூதன ஐடியா...' நடந்தது என்ன...? - வசமா மாட்டிகிட்ட இளைஞர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

25 வயதான தனியார் நிறுவன ஊழியரின் நிர்வாண வீடியோவை எடுத்து பெண் ஒருவர் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் மும்பையில் நடந்தேறியுள்ளது.

மும்பையின் பயந்தர் பகுதியில் வசிக்கும் 25 வயதான இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் இளைஞரின் செல்போன் நம்பருக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது.

அதையடுத்து அந்த இளைஞரும் அப்பெண்ணும் அடிக்கடி பேச தொடங்கி நண்பர்களாக மாறியுள்ளனர். அதைத்தொடர்ந்து ஒரு படி மேலே சென்று ஒருநாள் அந்த இளைஞரை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் நிர்வாணமாக வரும்படி அப்பெண் கேட்டுள்ளார்.

அந்த பெண்ணை கண்மூடித்தனமாக நம்பிய 25 வயது இளைஞரும், வீடியோ அழைப்பில் நிர்வாணமாக சென்றுள்ளார். இந்த வீடியோவை பதிவு செய்த அந்த பெண் அதன்பிறகு, இளைஞரிடமிருந்து ரூ .50 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்படி இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் சிபிஐ அதிகாரியிடம் புகார் செய்ய சென்றபோது, ஒரு அதிகாரியும் சேர்ந்து தன்னை மிரட்டியதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த இளைஞர். மேலும் புகாரில் தன்னை மிரட்டிய இரண்டு நபர்களுக்கும் ரூ .37,000 ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் என டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதோடு நிற்காமல் அதன்பிறகும் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதால் தற்போது உட்டான் காவல்துறையினரை அணுகியதாவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இம்மாதிரியான சம்பவம் தற்போது அதிகரித்து வருவதாகவும், ஆண்கள் பெண்கள் என அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்