VIDEO : "ஆத்தி, நம்ம புருஷன் காருல, யாரு அது 'பொண்ணு'??"... "ஹேய், 'அவள' வெளிய வர சொல்லு..." - நடுரோட்ல 'வண்டி'ய நிப்பாட்டி, அட்ராசிட்டி காட்டிய 'மனைவி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை நகரத்தின் பெட்டர் சாலை என்னும் பகுதியில் தம்பதி இருவர் இடையே நடைபெற்ற சண்டை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் டிராஃபிக் ஏற்பட்டுள்ளது.

சாலையில் தனது கணவர் வந்த ரேஞ்ஜ் ரோவர் காரை தடுத்து நிறுத்திய அவரது மனைவி, காருக்குள் வேறு ஒரு பெண் இருப்பதாகவும், அவருடன் தனது கணவர் தவறான உறவு வைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், கணவர் காரின் முன்பக்கம் ஏறி உட்கார்ந்து கொண்ட அந்த பெண், செருப்பை கழற்றி கண்ணாடியின் மீது அடித்துள்ளார். தொடர்ந்து, கதவு வழியாக கணவரை அடிக்கவும் முயற்சி செய்துள்ளார். மேலும், காரின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டுஅந்த பெண்ணை வெளியே இறங்கி வர சொல்லி ரகளை செய்துள்ளார். அந்த பெண்ணின் செயலால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

போக்குவரத்து தடை ஏற்படுத்தியதாக அந்த பெண்ணிற்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேற்கொண்டு புகார் எதுவும் பதிவு செய்யவில்லை. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்