'நான் மொதல்ல அது உண்மைன்னு நெனச்சேன்...' 'மேரேஜ்க்கு அப்புறம் தான் ஃபேக்னு தெரிஞ்சிச்சு...' - உச்சக்கட்ட கோவத்தில் மனைவி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனக்கு வழுக்கை உள்ளதை மறைத்து திருமணம் செய்த கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை வாழும் 29 வயதான இளைஞர் ஒருவர் தனக்கு வழுக்கை இருப்பதை மறைத்து 27 வயதான பெண்மணி ஒருவரை மணமுடித்துள்ளார். மேலும் திருமணம் முடிந்த பின்னர் தன் கணவனுக்கு வழுக்கை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண் கோபமடைந்து மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தன்னை ஏமாற்றிய கணவர் மீது மட்டுமல்லாமல் அவரின் குடும்பத்தினர் மீதும் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், மொபைல் போனை ஹேக் செய்துள்ளதாகவும் அடுக்கடுக்கான புகார்களை அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை காவல்துறையினர் அப்பெண்ணின், கணவன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவரது குடும்பத்தினர் ஜாமீன் கோரியுள்ளதால், அவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்