'தோழியுடன் நடந்து சென்ற 'கிரிக்கெட்' வீரருக்கு...'நேர்ந்த கொடூரம்'...அதிரவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பையில் தோழியுடன் நடந்து சென்ற கிரிக்கெட் வீரர்,குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்  ராகேஷ் பன்வார்.இவர் தனது பகுதியில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியினை அளித்து வருவது வழக்கம்.இதனிடையே நேற்று தனது தோழியுடன் பாண்டூப் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அவரை வழி மறைத்த 3 பேர் கொண்ட கும்பல் ராகேஷ்யை சரமாரியாக குத்தி படுகொலை செய்தது.இதையடுத்து அந்த கும்பல் சம்பவ இடத்தை விட்டு தலைமறைவாகியது. படுகாயமடைந்த ராகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் சம்பவம் குறித்து பேசிய ராகேஷின் நண்பர் கோவிந்த் ரத்தோர் 'சம்பவம் நடந்த போது ராகேஷ் தனது தோழியுடன் பாண்டூப்புக்கு சென்றிருந்தார். அப்போது நண்பர்கள் யாரும் அவருடன் இல்லை.அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் கான் குடும்பத்தினருக்கும் ,ராகேஷ்க்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. எனவே அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்' என  கோவிந்த் ரத்தோர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கிரிக்கெட் வீரர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மும்பையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CRICKET, MUMBAI CRICKETER, RAKESH PANWAR, STABBED TO DEATH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்