கல்யாணத்தை 'கனவுலயும்' மறக்கக்கூடாது.. விருந்தினர்களுக்காக 8 லட்சத்துக்கு 'விஸ்கி' ஆர்டர்.. செய்த தம்பதி

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தங்களது திருமண வரவேற்புக்கு வரும் விருந்தினர்களுக்கு அளிப்பதற்காக ரூபாய் 8 லட்சத்துக்கு மும்பையை சேர்ந்த தம்பதியினர் விஸ்கி ஆர்டர் செய்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த உடித் மற்றும் சைலி தம்பதியர் வரிகளுடன்  சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட ஜாக் டேனியல்ஸ் விஸ்கியை ஆர்டர் செய்துள்ளனர். வரும் நவம்பர் 14-ம் தேதியன்று இவர்களது திருமண வரவேற்பு மும்பையில் நடைபெறவுள்ளது.

இதற்காக ஒரு முழு பேரல் விஸ்கியை இவர்கள் ஆர்டர் செய்துள்ளனர். பேரலுக்கு உள்ளே விஸ்கியானது சுமார் 200-225 பாட்டில்கள் இருக்கும். ஒவ்வொன்றும் தனித்துவ சுவையுடன், தனித்தனி சுவைகளில் கிடைக்குமாம். வரவேற்பு தவிர திருமணத்துக்கு முந்தைய விழாக்களுக்கும் இந்த விஸ்கி பாட்டில்கள் வழங்கப்பட இருக்கிறதாம்.

முதன்முறையாக திருமணத்திற்கு பேரலில் விஸ்கி ஆர்டர் செய்த தம்பதி என்னும் பெயர் இவர்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் இந்த விஸ்கியை வாங்குபவர்களுக்கு அவர்களின் பெயர் பாட்டிலில் பொறிக்கப்பட்டு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்