VIDEO: 'சார்.. சார்.. அது தண்ணி இல்ல...' 'குடிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுருக்கு...' - பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பையில் உதவி ஆணையர் ஒருவர் தண்ணீர் என நினைத்து சானிட்டைசரைக் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மாநகராட்சியில் வரும் 2021-2022 நிதியாண்டிற்கான 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை ஆணையர் இக்பால் சிங் சகல்  இன்று தாக்கல் செய்துள்ளார்.

அப்போது உடன் இருந்த உதவி ஆணையர் தாகத்திற்காக பக்கத்தில் இருந்த தண்ணீர் எடுத்து குடித்துள்ளார். குடித்தபின் தான் தெரிந்துள்ளது அது சானிட்டைசர் என்று.

இந்நிலையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துக்கொண்டிருக்கும் போதே உதவி ஆணையர் ரமேஷ் பவார் குடித்த சானிட்டைசர் வாந்தி எடுத்த சம்பவம் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்