‘நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்’.. மும்பை சென்ற விமானத்தை அதிரவைத்த இளம்பெண்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஏர்ஏசியா விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் இருந்து மும்பை நோக்கி ஏர்ஏசியா விமானம் 114 பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்துள்ளது. அப்போது விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது, மோகினி மண்டல் என்ற பெண் பயணி விமானப் பணிப்பெண்ணிடம் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதில், தான் உடலில் வெடிகுண்டுகளை கட்டியிருப்பதாகவும், அதை வெடிக்க வைக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விமானப் பணிப்பெண் உடனே பைலட்டிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவசரமாக விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. உடனே விமானத்துக்குள் வந்த பாதுகாப்பு படையினர், அப்பெண்ணை சோதனையிட்டுள்ளனர். ஆனால் அவரது உடலில் வெடிகுண்டு ஏதும் இல்லை என தெரியவந்தது. இதனை அடுத்து அப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரின் தந்தை செய்தி நிறுவனத்தில் பணிபுரிவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவரா? இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்