'பிறந்தநாளை கொண்டாட சிறுமிக்கு வந்த வித்தியாசமான ஆசை'... 'காரணத்தை கேட்டு நெகிழ்ந்த தந்தை'... துணிச்சலாக எடுத்த முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

5 வயது சிறுமி தனது பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடியது பலரது கவனத்தையும் பெற்றுள்ள நிலையில், அதன் பின்னணி காரணம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மும்பை சிறப்பு படை போலீஸ் பிரிவில் காவலராக பணியாற்றி வருபவர் நினாட். இவரது ஜான்வி. இவர்களுக்கு உர்வி என்ற 5 வயது மகள் இருக்கிறார். இவருக்குச் சமீபத்தில் பிறந்த நாள் வந்தது. ஆனால் இந்த பிறந்தநாளைக் கொண்டாட உர்விக்கு வித்தியாசமான ஆசை ஏற்பட்டது. வழக்கம் போல் நண்பர்களுடன் கொண்டாடாமல் பிறந்த நாளை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தார். தனது ஆசை குறித்து தனது தந்தையிடமும் கூறினார்.

மகளின் ஆசையைக் கேட்டு ஆச்சரியமடைந்த அவரது தந்தை மகளின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தார். தனது பிறந்த நாளை நடுக்கடலில் கொண்டாட வேண்டும் என்பது தான் உர்வியின் ஆசையாக இருந்தது. அதே நேரத்தில் பெண் குழந்தைகளைக் காப்பதற்காகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இதன்மூலம் வலியுறுத்த அவர் முடிவு செய்தார். இதன்படி நினாட் தனது மகள், குடும்பத்தினருடன் அர்னாலா கடற்கரைக்கு வந்தார். அங்கிருந்த படகு மூலம் கரையிலிருந்து 3.6 கி.மீ. தூரம் (2 நாட்டிகல் மைல்) கடலுக்குள் சென்றனர்.

அவர்கள் உயிர்காக்கும் ஜாக்கெட்டுகள் அணிந்து இருந்தனர். பின்னர் உர்வி மனதைரியத்துடன் தனது தந்தையுடன் கடலில் இறங்கினாள். தெர்மோகால் உதவியுடன் கேக்கை கடலில் மிதக்க விட்டு அதனை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினாள். உர்வி வெட்டிய கேக்கில் பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் என்ற வரிகள் இடம் பெற்று இருந்தன. மனதைரியத்துடன் நடுக்கடலில் 5 வயது சிறுமி பிறந்த நாளை கொண்டாடிய விதமும், அதன்மூலம் உர்வி ஏற்படுத்திய விழிப்புணர்வும் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்