யூடியூப் நேரலையில் பேசிக்கொண்டிருந்த இளம் பெண்.. பைக்கில் வந்த இளைஞர்கள் செய்த மோசமான காரியம்! பதைபதைக்க வைத்த சம்பவம்.

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரியவை சேர்ந்த பெண் ஒருவர் youtube நேரலையில் பேசிக் கொண்டிருக்கும் போது அவருடன் வந்து சில்மிஷம் செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

Advertising
>
Advertising

மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் நடந்தபடி youtube நேரலையில் கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் செய்த காரியம் கூடியிருந்த அனைவரையும் பதைபதைக்க செய்தது. வந்தவர்கள் அந்த இளம் பெண்ணை கடந்து செல்லும் பொழுது அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தும் வண்டியில் அமரச் சொல்லி வற்புறுத்தவும் செய்தனர்.

அவர்களுள் ஒரு இளைஞர் இறங்கி வந்து அந்த பெண்ணை முத்தமிடவும் முயற்சி செய்திருக்கிறார். அதன் பிறகு அந்த பெண், அவர்களின் கையை உதறிவிட்டு அங்கிருந்து தப்பி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ ஊடகங்களில் பரவியதை அடுத்து குறிப்பிட்ட அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரு இளைஞர்களையும் கைது செய்திருக்கின்றனர்.

இது தொடர்பில் இணையத்தில் பரவும் அந்த வீடியோவில் அந்த பெண்ணின் கையை பிடித்து வம்பு இழுக்கக்கூடிய இளைஞர்களின் செயல்கள் அடங்கிய பரபரப்பு காட்சிகள் இடம்பெற்றத்தை,  அந்த இளைஞர்களின் செயல்கள் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

MUMBAI, KOREAN GIRL, YOUTUBE LIVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்