“தப்புக் கணக்கு போடாதீங்க!”.. “இட்டுக்கட்டி பேசக்கூடாது!”.. என்னைக்கும் இல்லாம சீனா இப்படி கதறுவது ஏன்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரதமர் நரேந்திரமோடி நேற்று திடீரென லடாக்கிற்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்தார்.  அப்போது இந்த அரிய நிகழ்வில் பேசிய மோடி எல்லை விரிவாக்க காலம் எல்லாம் ஓய்ந்து விட்டது இனி இது வளர்ச்சிக்கான காலம்தான் என்று பேசியிருந்தார். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சை சீனா மறுதலித்து சீனாவுக்கு எதிராக ராஜாங்க உறவுகளில் தப்பு கணக்கு போட வேண்டாம் என்றும் எல்லை விரிவாக்கம் பற்றிய மோடியின் பேச்சைக் குறிப்பிட்டு இது இட்டுக்கட்டப்பட்ட அல்லது மிகைப்படுத்தப்பட்ட பேச்சு என்றும் விமர்சித்துள்ளது.

புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, தனது 14 அண்டை நாடுகளுடனான எல்லையில் 12 நாடுகளின் எல்லையை சீனா அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்ததாகவும் சில எல்லைகளை நட்புரீதியான ஒற்றுமை மற்றும் பிணைப்பு களாக மாற்றி உள்ளதாகவும், ஆகவே எல்லை விரிவாக்கத்திற்காக சீனா முயற்சிப்பதாகக் கூறுவது என்பது மிகைப்படுத்தப்பட்ட பேச்சு என்றும் விமர்சித்தார்.

இதேபோல், சீன வெளியுறவு அமைச்சர் ஷாவோ லிஜியன் பேசும்போது, சீனாவுக்கு எதிரான தவறான கணக்குகளைப் போட வேண்டாம் என்றும், இரு நாட்டு தலைவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா விசுவாசமாக பின்பற்றும் என்று தாங்கள் நம்புவதாகவும், இரு நாடுகளும் இணைந்து எல்லையில் அமைதியை ஏற்படுத்த முயற்சிப்பதே நல்லது என்றும், இந்தியாவும் சீனாவும் பெரிய வளரும் நாடுகள் எனும் பட்சத்தில் தேச வளர்ச்சி மற்றும் புத்துருவாக்கம் என்கிற பணிகளில் இருநாடுகளும் இருப்பதுபோன்று இருநாட்டு உறவுகளையும் பாதிக்குமாறான பொருளாதார விவகாரத்தில் சமீபத்திய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவது தேவையற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் இருதரப்பு உறவுகளை செம்மைப் படுத்தும் விதமாக இருநாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் இந்த ஒத்துழைப்புக்கு இடையிலான செயற்கையான முட்டுக்கட்டைகள் மூலமாக, உலக அமைப்பின் விதிமுறைகளை மீறுவது இந்தியாவின் நலன்களையும் பாதிக்கும் என்றும், சீன வர்த்தக தங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க சீனா அடைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் எல்லையில் இந்தியா சூழ்நிலையை மேலும் சிக்கலாகி விட்ட தாகவும் சீனாவும் இந்தியாவும் ராணுவம் மற்றும் ராஜீய வழிகளின் மூலமாக தொடர்பில் இருக்கும் நாடுகள் என்றும் இரு நாடுகளுமே எல்லையில், சூழ்நிலை சிக்கலாகும் விதமாக நடந்து கொள்வது தேவையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்