‘8வது மாடியில் உண்டான தீ விபத்து!’.. ‘மளமளவென அடுத்தடுத்து பரவிய சம்பவம்’.. ‘தீயணைக்கும் படலத்தில் வீரர்கள்!’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை பைகுல்லா எனும் பகுதியில் மகாராணா பிரதாப் சவுக் எனும் இடத்தில் உள்ளது ஜிஎஸ்டி பவன்.

இங்கு திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியதை அடுத்து, மும்பையே பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.  இந்த கட்டிடத்தின் 8வது மாடியில் முதலில் தீப்பற்றத் தொடங்கியதாகவும், ஆனால் தீப்பற்றத் தொடங்கிய சில மணித் துளிகளியேலேயே அடுத்தடுத்து 9வது மாடிக்கும் தீப்பற்றத் தொடங்கியதாகவும் தெரிகிறது.

முதற்கட்டமாக தீயை அணைக்க 16 தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கத் தொடங்கியனர். இந்த கட்டிடங்களில் இருந்த பல்வேறு மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்