Park-க்கு வந்த பொண்ணு கிட்ட என்ன பண்ணிருக்கான் பாருங்க"... அத்துமீறிய இளைஞருக்கு பொதுமக்களின் 'ஸ்பாட் பனிஷ்மெண்ட்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகா:  ஹாசன் மாவட்டம் மஹாராஜா பூங்காவில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, அந்த நபரை அரை நிர்வாணமாக அடித்து இழுத்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Advertising
>
Advertising

விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்  மேக்ராஜ். ஹசன் நகரில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  ஹசன் நகரின் மகாராஜா பார்க் பகுதியில் மேக்ராஜ் நடந்து சென்றபோது, பூங்காவில் பெண் ஒருவர் எதிரே வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு, அத்துமீறியதாக கூறப்படுகிறது.

அரை நிர்வாணம்

இதை நேரில் பார்த்த பொதுமக்கள் மேக்ராஜை பிடித்து  கடுமையாக அடித்து உதைத்துள்ளனர். மேலும், அவரை போலீசில் கொண்டு போய் ஒப்படைக்காமல், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில், மேக்ராஜை கொடூரமாக தாக்க ஆரம்பித்தனர். அத்துடன் அவரை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாகவும் அழைத்து சென்றுள்ளனர். ஒரு நபரை அரை நிர்வாணமாக சாலையில் இழுத்து  செல்லும் தகவல் போலீசாருக்கு கிடைத்து சம்பவ இடத்திற்ககு விரைந்து வந்தனர்.

என் தம்பிய பாத்து 74 வருஷம் ஆச்சு.. கட்டித் தழுவிய சகோதரர்கள்.. கண் கலங்க வைத்த வீடியோ!!

விசாரணை

மேக்பராஜை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் எந்த புகாரும் கொடுக்கவில்லை என தெரிகிறது. தன்னை கொடூரமாக தாக்கி பொது இடத்தில் அரை நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதாக மேகராஜ் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

22 வருஷம் முன்னாடி காணாமல் போன நகைங்க - அப்பவே அவ்ளோ‌ ரூபா..‌ இப்போ... இந்தியக் குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கோர்ட்..!

புகார்

இதனையடுத்து மேக்ராஜை தாக்கிய அடையாளம் தெரியாத 4 பேர் மீது, ஹாசன் நகர போலீஸார் ஐபிசி பிரிவுகள் 341 , 323, 504, மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நடுரோட்டில் இளைஞர் ஒருவரை அரை நிர்வாணமாக தாக்கி இழுத்து செல்லும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது, கடுமையாக தாக்கப்பட்ட அந்த நபர் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த மேகராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  இந்நிலையில், மேகராஜ் பூங்காவில் இருந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அங்கிருந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கிய நபர்கள் தொடர்பாக விசாரித்து வருகிறோம் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

MAN, HARASSING, WOMAN, KARNATAKA, PARK, கர்நாடகா, விசாரணை, புகார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்