"போயிருந்தா என்னாயிருக்கும்.. நல்லவேளை!".. கடைசி நேர ட்விஸ்டால் கோழிக்கோடு விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டிக்கெட் ரத்தானதால், கோழிக்கோடு விபத்தில் சிக்கிய விமானத்தை தவறவிட்டதற்காக பயணி ஒருவர் நிம்மதி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த ஏர் இந்தியா விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தின் டேபிள் டாப் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது பள்ளத்தாக்கில் விழுந்து இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி, துணை விமானி உட்பட 17க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இதனிடையே அந்த விமானத்தில் பயணிக்கும் டிக்கெட் கடைசி நேரத்தில் ரத்தானதாகவும், அதனால் தான் உயிர் பிழைத்ததாகவும், துபாயில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த பயணி நௌபல் தெரிவித்துள்ளார்.

எனினும் வேலை இழந்த தனக்கு மீண்டும் துபாயில் வேலை கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தான் உயிர் பிழைத்ததை பற்றி தனது வீட்டாருடன் அவர் பேசி வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்