'என் மனைவியோட கள்ளக்காதலன'.. 'சுட்டீன்னா.. இதான் கிஃப்ட்'.. இப்படி ஒரு டீலிங்கா? வைரல் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் மனைவியின் கள்ளக்காதலனை சுட்டுக் கொல்வதற்காக, பிசினஸ்மேன் ஒருவர் கூலிப்படை ஆள் ஒருவரை அப்பாய்ண்ட் செய்துள்ளதும், அதற்கு அவர் தந்துள்ள பரிசும் போலீசாருக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

டெல்லியில் பிசினஸ் புரியும் சோனு பண்டிட் என்பவர், தனது மனைவி மீது சந்தேகப்பட்டதால், குல்வீர் தாகர் என்கிற இளம் வயதுடைய கூலிப்படை ஆள் ஒருவரிடம், தனது மனைவியைக் கொல்லச் சொல்லி ஒரு வித்தியாசமான கிஃப்ட்டை தருவதாகவும், அந்த கிஃப்ட் என்னவென்றும் குல்வீரிடம் கூறியுள்ளார்.

அவருடைய அந்த டீலிங் பிடித்துப் போனதும், குல்வீர் தாகர், சோனு பண்டிட் சொன்னதுபோலவே, சோனு பண்டிட்டின் மனைவியுடன் உறவில் இருப்பதாக சோனு பண்டிட்டால் சந்தேகப்படும் நபரைக்கொல்ல, டெல்லி ஹரி நகருக்குச் சென்று, துப்பாக்கி கொண்டு எய்ம் செய்திருக்கிறார். ஆனால் அந்த நபர் மிஸ் ஆக, துப்பாக்கி சத்தம் அந்த ஏரியாவையே எழுப்பியது.

அதன் பின்னர் குல்வீர் தாகர் தப்பியோடியுள்ளார். அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவரை ஏவிவிட்ட சோனு பண்டிட் தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக ஹரித்துவார் சென்றிருப்பதாகவும், அவரது மனைவியின் கள்ளக்காதலன் என்று சந்தேகப்படும் நபரை சுடுவதற்கு சோனு பண்டிட் கொடுத்த துப்பாக்கிதான் பரிசு என்றும் கூறியுள்ளார்.

காரணம் அந்த துப்பாக்கி 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பெரட்டோ வகை துப்பாக்கி என்றும், அந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், சோனு பண்டிட்டை பிடித்துவர போலீஸ் படை ஹரித்துவாருக்கு விரைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

DELHI, GUN, WIFE, KILLER, BERATTA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்