VIDEO: ‘கடிக்க வந்த புலி’.. ‘தப்பிக்க இளைஞர் போட்ட பக்கா ப்ளான்’.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புலியிடம் சிக்கிய இளைஞர் சாமர்த்தியமாக தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்மை அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வயல்வெளிக்குள் ஒற்றை புலி சுற்றிக்கொண்டு இருந்துள்ளது. அந்த சமயம் இளைஞர் ஒருவர் வயலில் நின்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது அவரை பார்த்த புலி கடிப்பதற்கு தக்க சமயம் பார்த்து மெதுவாக பதுங்கி வந்துள்ளது. இதனை அறிந்த இளைஞர் உடனே இறந்ததுபோல கீழே அசைவற்று படுத்துள்ளார்.

ஆனாலும் வீடாத புலி அவரின் அருகிலேயே அமர்ந்துள்ளது. அப்போது வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் சத்தமாக கூச்சலிட்டுள்ளனர். இதனைப் பார்த்த மிரண்ட புலி தலைதெறிக்க அங்கிருந்து ஓடியுள்ளது. இதனை அடுத்து உயிர்பிழைத்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ATTACKED, TIGER, YOUTH, VIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்