'இனிமேல் மதம் மாத்துறதுக்காக...' 'திருமணம் செய்தால் 5 வருஷம் ஜெயில்...' - சட்டம் கொண்டு வரப்போவதாக அறிவித்த மாநிலம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேசத்தில் மதமாற்றம் செய்யவேண்டும் என திருமணம் செய்வோருக்கு 5 ஆண்டு சிறை என அம்மாநில அரசு புதிய சட்டம் கொண்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத் என்ற பெயரில் பிற மதத்தினரை கட்டாயப்படுத்தியும், மோசடி வழிகளிலும் திருமணம் செய்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு அதிரடி சட்டம் ஒன்றை கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது.

அதன்படி மதமாற்றம் செய்யவேண்டும் என பிற மதத்தினரை திருமணம் செய்வோருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை என்ற வகையில் புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா (Narottam Mishra) சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய பிரதேச தர்ம ஸ்வதந்த்ரே மசோதாவை (Madhya Pradesh Dharm Swatantrey Bill) அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்