மாநிலத்தையே ‘உலுக்கிய’ 6 கொலைகள்... கைதான ‘சயனைடு’ கில்லர் ‘ஜோலி’ சிறையில் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... ‘பரபரப்பு’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் 6 பேரை சொத்துக்காக கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ள ஜோலி சிறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள கூடத்தாயி பகுதியைச் சேர்ந்தவர் ராய் தாமஸ். இவருடைய மனைவி ஜோலி. கடந்த 2002 முதல் 2016 வரையிலான 14 ஆண்டுகளில் ஜோலியின் கணவர் ராய் தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உட்பட 6 பேர் மர்மமாக உயிரிழந்தனர். அதன்பிறகு அவர்களுடைய சொத்துக்கள் ஜோலியின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது.
இதையடுத்து ராய் தாமசின் அண்ணன் ரோஜோ தந்தையின் உயில் மற்றும் குடும்பத்தினர் 6 பேரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் 6 பேரின் உடல்களையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த போலீசார், ஜோலியிடம் விசாரணை நடத்தியதில் சொத்துக்காக அவர் சயனைடு கொடுத்து அவர்களைக் கொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஜோலியை கைது செய்த போலீசார் அவரை கோழிக்கோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு சயனைடு வாங்க உதவிய உறவினர் மேத்யூ, நகை தொழிலாளி பிரஜூகுமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகான விசாரணையில், மேலும் சிலரையும் கொல்ல ஜோலி திட்டம் தீட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜோலி இன்று அதிகாலை கூர்மையான ஆயுதத்தால் மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்த சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சிறையில் ஜோலி பல்லால் கையைக் கடித்து, அறையில் இருந்த டைல்ஸின் ஓரத்தில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
‘அவனுக்கு இப்போதான் பொண்ணு பாத்துட்டு இருந்தோம்’.. ‘என் மகனை ஏன் கொல்லணும்’.. கதறி அழுத குடும்பம்..!
தொடர்புடைய செய்திகள்
- 'மனைவியை 300 துண்டுகளாக வெட்டி... டிபன் கேரியரில் போட்டு... 70 வயது முதியவர் செய்த கொடூரம்!
- 'தம்பி உங்கள வேலைய விட்டு தூக்குறோம்'... 'நொறுங்கி போன இளைஞர்'... சென்னையில் நடந்த கோரம்!
- ‘என் சாவுக்கு இவங்கதான் காரணம்’.. கொய்யாப்பழம் பறிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..!
- 'போன் பண்ணினா எடுக்க மாட்டியா...?' 'சரமாரியாக வெட்டிக்கொண்டு இருந்தவரிடம் அரிவாளை பிடுங்கி...' கள்ளக்காதலினால் நடந்த பயங்கரம்...!
- ‘தலை தனியே.. உடல் தனியே’.. நாயால் வெளிச்சத்துக்கு வந்த சடலம்..சேலத்தை நடுங்கவைத்த சம்பவம்!
- ‘ராங் நம்பர்’ மூலம் அறிமுகமான இளைஞர்.. கணவருக்கு தெரியாமல் மனைவி செய்த காரியம்.. வெளியான பகீர் வாக்குமூலம்..!
- ‘வீட்டு வாசலில்’... ‘தூங்கிக் கொண்டிருந்த இளம் தம்பதி’... ‘இளைஞர்களால் நடந்த பயங்கரம்’... ‘2 ஆண்டுகள் கழித்து தெரியவந்த அதிர்ச்சி’!
- 'வீட்டுக்கு போய் கொண்டிருந்தவரை வழிமறித்து...' பத்து பேர் சுற்றி நின்று, அரிவாள், கத்தி, கம்பு, கடப்பாரையுடன்... கொடூரமான சம்பவம்...!
- ‘உள்பக்கமாக பூட்டியிருந்த கதவு’.. ‘வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்த ஹவுஸ் ஓனர்’.. திருப்பூர் அருகே பயங்கரம்..!
- ‘மனைவியை கொலை பண்ணிட்டேன்’.. ‘நானும் தற்கொலை பண்ணப்போறேன்’.. மாமனாரை மிரளவைத்த ‘போன்கால்’!