"முதல் கணவர் இறந்துடுவார்.!".. ஜாதக நம்பிக்கையா.? காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்.! திடுக்கிடும் பின்னணி.. நடந்தது என்ன.?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அதன் பின்னால் அவரது காதலி குடும்பத்தினருடன் போட்டு வைத்திருந்த திட்டம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கேட்சை மிஸ் செய்த கோலி.. அடுத்த கணமே அஸ்வின், ரோஹித் கொடுத்த ரியாக்ஷன்.. வைரல் வீடியோ!!

கன்னியாகுமரி - கேரள மாநில எல்லையில் பாறசாலை என்னும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (வயது 23).

இவர் களியக்காவிளை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற இளம்பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கிரீஷ்மா வீட்டிற்கு சென்றிருந்த அவரது காதலன் ஷாரோன் ராஜ், வீட்டிற்கு வெளியே வந்த பிறகு வாந்தி எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது அவருடன் இருந்த நண்பர் இதுபற்றி கேட்டதாக கூறப்படும் நிலையில், ஷாரோன் ராஜ் எதுவும் தெளிவாக சொல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டிற்கு வந்த ஷாரோன் ராஜின் உடல் நிலையும் மோசமாகி உள்ளது. இதன் பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், அவரது உடல்நிலை இன்னும் மோசம் ஆகவே திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கே அவரது உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஷாரோன் ராஜ் உயிரிழந்தார். இதனிடையே, கிரீஷ்மா வீட்டில் இருந்து வந்த பிறகு ஷாரோன் ராஜ் உடல்நிலை மோசமானதால் இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை ஷரோனின் தந்தை அளித்துள்ளார்.

இது தொடர்பாக கிரீஷ்மா மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணை வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர். ஆரம்பத்தில் இதனை அவர்கள் மறுத்து வந்த நிலையில், ஷாரோன் ராஜ் உடலில் விஷம் கலந்திருப்பது தொடர்பாக தெரிய வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, காதலனுக்கு விஷம் கொடுத்ததை கிரீஷ்மா ஒப்புக் கொள்ள, இதற்கான காரணம் திடுக்கிட வைத்துள்ளது.

கிரீஷ்மாவுக்கு சமீபத்தில் வேறொரு நபருடன் நிச்சயம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே வேளையில், கிரீஷ்மாவின் முதல் கணவர் இறந்து விடுவார் என்று ஜாதகம் பார்த்து ஜோதிடர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி இருக்கையில், கிரீஷ்மாவுக்கு தாலி கட்டி ரகசியமாக ஷாரோன் திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் கணவர் இறந்து விடுவார் என்பதால், கிரீஷ்மா மற்றும் அவரது பெற்றோர்கள் இணைந்து ஷாரோன் ராஜை கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனது வீட்டிற்கு ஷாரோன் ராஜை அழைத்த கிரீஷ்மா, ஆயுர்வேத மருந்து ஒன்றில் விஷம் கலந்து ஷாரோனுக்கு கொடுத்துள்ளதை விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கிடையில், கிரீஷ்மாவும் தற்கொலை முயற்சி மேற் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜாதகத்தில் இருந்த விஷயத்தால் இளைஞர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வருடமாக காதலித்து வந்த இளைஞரை விஷம் கொடுத்து இளம்பெண் கொலை செய்துள்ள சம்பவம், குலை நடுங்க வைத்துள்ளது.

Also Read | "தயவு செஞ்சு Privacyக்கு மதிப்பு குடுங்க".. வைரல் ஆன வீடியோ.. கொந்தளித்த கோலி!!

KERALA, YOUTH, LOVER, WOMAN, POISON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்