“Room-ல வெச்சு பூட்டி.. Toilet தண்ணிய குடிக்க சொல்லி”.. பரபரப்பை கிளப்பிய இளம் பெண்ணின் ‘இன்ஸ்டா’ பதிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாமியாரின் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மருமகளுக்கு நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. தற்போது பொறியியல் இறுதி ஆண்டு  படித்து வருகிறார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு முகேஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் வைஷ்ணவி மாமியார் வீட்டில் தங்கி வருகிறார்.

இந் சூழலில் தனது மாமியாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. வைஷ்ணவி வீட்டில் இருக்கும்போதே அந்த நபர் மாமியாரைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகள், இது குறித்து மாமியாரிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நபர் மீண்டும் மாமியாரைப் பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த நபரை வாசலில் மறைத்த மருமகள் வைஷ்ணவி, அவரை உள்ளே விடாமல் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் வைஷ்ணவியின் முகத்தை பலமாக தாக்கியுள்ளார். இதில் வைஷ்ணவியின் கண் அருகே கடுமையான காயமும் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து உடனடியாக மருமகள் வைஷ்ணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைஷ்ணவி, கணவர் வேலைக்கு சென்றதும் மாமியார் தன்னை ஒரு அறையில் வைத்து பூட்டி விடுவார் என்றும், தண்ணீர் கேட்டால், டாய்லெட் தண்ணீரை குடித்துக்கொள் என கூறி விடுவார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் வைஷ்ணவிக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து மாமியார் தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் வெளியாகவில்லை. மாமியாரின் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மருமகள் தாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

KERALA, AFFAIR, MOTHERINLAW, DAUGHTERINLAW

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்