முதல் தடவையா ஒரு டாக்டர் கையெழுத்து புரியுது.. வைரலாகும் மருந்து சீட்டின் புகைப்படம்.. டாக்டர் சொல்லிய சூப்பர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் எழுதிய மருந்து சீட்டின் புகைப்படம் திடீரென வைரலாகிவிட்டது. இதற்கு காரணம் அதில் அந்த மருத்துவர் எழுதியிருக்கும் விதம் தான்.
மருத்துவரின் கையெழுத்து
பொதுவாக இந்த உலகில் கண்டுபிடிக்க மிகவும் சிரமமான காரியங்களுள் ஒன்று மருத்துவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதுதான். இது மெடிக்கல் பணியாளர்களுக்கு மட்டுமே தெரியும் வினோத பாஷையோ என்றுகூட சிலருக்கு தோன்றியிருக்கும். ஆனால், தற்போது வைரலாக பரவிவரும் இந்த புகைப்படத்தில் டாக்டர் ஒருவர் தெளிவான கையெழுத்தில் மருந்துகளின் பெயர்களை எழுதியிருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த பென்சி என்பவர் கடந்த வாரம் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த மருந்து சீட்டின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இது பலரது கவனத்தையும் ஈர்த்தது மட்டும் அல்லாமல், முதல்முறையாக ஒரு டாக்டரின் கையெழுத்து புரிவதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வந்தனர். உண்மையாகவே, டாக்டர் நிதின் நாராயணன் எழுதியுள்ள இதனை யாராலும் படிக்க முடியும். இவர் பாலக்காட்டில் உள்ள சுகாதார மையத்தில் (CHC) குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிவதாக பென்சி தனது பதிவில் குறிப்பிட்டிருந்திருக்கிறார்.
படிப்பு
சுலபமாக படிக்கும் வகையில் டாக்டர் நிதின் நாராயணன் மருந்து குறிப்புகளை block letters-களில் எழுதியிருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக பாலக்காட்டில் உள்ள சுகாதார மையத்தில் நிதின் பணியாற்றி வருகிறார். சிறுவயதில் இருந்தே தெளிவாக எழுதவேண்டும் என்பதே இவருடைய நிலைப்பாடாக இருந்து வந்திருக்கிறது. டாக்டர் நாராயணன் திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) எம்.டி. படிப்பையும் முடித்திருக்கிறார்.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள டாக்டர் நிதின்,"நான் எனது மருந்துச் சீட்டுகளைத் block letters-களில் எழுதுகிறேன். மற்ற டாக்டர்கள் பிஸியாக இருப்பதால் அப்படி எழுதுகிறார்கள். நான் பிஸியாக இருக்கும்போது கூட மருந்துச் சீட்டுகளை தெளிவாக எழுத முயற்சி செய்கிறேன். நோயாளிகள் இதை அடிக்கடி பாராட்டுகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், நிதின் எழுதிய மருந்து சீட்டின் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ராகுலை பாத்ததும்.. திடீர்ன்னு சிறுமி செஞ்ச விஷயம்.. கூட்டத்துக்கு மத்தியில் நடந்த சம்பவம்!!
- "நிம்மதியே இல்ல".. முதல்வரை பாக்க வீட்டில் இருந்து தனியாக சென்ற மாணவன்.. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.!!!
- "எல்லா சந்தோஷமும் போய்டுச்சு.. தலைமறைவா இருக்கேன்".. லாட்டரியில் 25 கோடி வென்ற ஆட்டோ டிரைவர்.. மனுஷனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..!
- "இது தான் அப்பா, பொண்ணு Goals போல".. ஒரே நாளில் மகளுடன் வழக்கறிஞராக பதிவு செய்த தந்தை.. நெகிழ வைத்த பின்னணி!!
- ஆற்றில் மிதந்து வந்த பெட்டிகள்.. "உள்ள கட்டுகட்டா 500 ரூபாய் நோட்டு இருந்துச்சா??".. பரபரப்பை உண்டு பண்ணிய சம்பவம்!!
- 52 வருசத்துல.. லாட்டரிக்கு செலவு செஞ்சது மட்டும் 3.5 கோடி ரூபா.. "ஆனா கெடச்ச பரிசு எவ்ளோ தெரியுமா?"
- "அடேங்கப்பா.. 71 வயசுல இப்டி ஒரு திறமையா?".. இந்தியாவையே திரும்பி பார்க்க வெச்ச வேற லெவல் பாட்டி!!
- போன வருசம் கேரள லாட்டரியில் 12 கோடி ஜெயிச்ச ஆட்டோ ஓட்டுநர்.. "இப்போவும் நான் ஆட்டோ தான்'ங்க ஓட்டுறேன்".. சுவாரஸ்ய பின்னணி!!
- மகனின் உண்டியல் காசு எடுத்து லாட்டரி வாங்கிய ஆட்டோ டிரைவர்.. வாழ்க்கையவே தலைகீழா மாத்திடுச்சு! 25 கோடி வென்ற கதை
- "தோளுல 300 கிலோ வெயிட்டு".. ரியல் பாகுபலியாக மாறிய கேரள வாலிபர்.. அனல் பறக்கும் வீடியோ!!