எங்க மாநிலத்துல 'கொரோனா' சமூக பரவல் ஆயிடுச்சு... அதிர்ச்சி தகவல் வெளியிட்ட 'முதல்வர்'!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல மாநிலங்களில் நாளுக்கு நாள் வைரஸ் உச்சம் தொட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பூந்துரா, புல்லுவிலா ஆகிய பகுதிகளில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில்,  அப்பகுதியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதாக  கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் கேரள மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் பூந்துரா பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வந்த மருத்துவக் குழுவை அப்பகுதி மக்கள் தங்கள் ஊருக்குள்  வரக்கூடாது எனக்கூறி விரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்