பேஸ்புக்கில் கீர்த்தி சுரேஷ் ஃபோட்டோ வைத்து இளைஞரிடம் 40 லட்சம் மோசடி.. பலே திட்டம் போட்ட கணவன் மனைவி! கைது செய்யப்பட்ட பிண்ணனி

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Advertising
>
Advertising

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.  தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி  படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர், உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.

இச்சூழலில் கர்நாடக மாநிலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை முகநூலில் முகப்பு படமாக வைத்து ஹசன் மாவட்டத்தின் தசராளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்  பரசுராம் என்ற இளைஞரிடம் ரூபாய் 40 லட்சத்தை மோசடி செய்துள்ளார்.

பரசுராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் மஞ்சுளாவை கைது செய்துள்ளனர், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மஞ்சுளாவின் கணவர் தலைமறைவாக இருப்பதால் அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

40 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து மஞ்சுளா & அவரது கணவர் இருவரும் சேர்ந்து தங்கம் கார், பைக் மற்றும் வீட்டை  வாங்கியுள்ளனர். மஞ்சுளா,  இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

KEERTHY SURESH, KARNATAKA, KARNATA WOMEN, HAASAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்