'திருமண உதவி திட்டம்'...'ஏழை பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ3 லட்சம் நிதியுதவி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஏழை பிராமண குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு பல்வேறு உதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியம் இரண்டு திருமண திட்டங்களைத் தொடங்க அரசின் அனுமதியை எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது. அதில், பொருளாதார ரீதியாகப் பலவீனமான பின்னணியில் உள்ள பூசாரிகளைத் திருமணம் செய்யும் 25 பிராமண பெண்களுக்கு ரூ .3 லட்சம் நிதி பத்திரங்களை வழங்குதல், மற்றொன்று  பொருளாதார ரீதியாகப் பலவீனமான குடும்பங்களைச் சேர்ந்த 550 பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ .25,000 வழங்குதல் ஆகும்.

இதுகுறித்து பேசிய, பிராமண மேம்பாட்டு வாரிய தலைவர் எச் எஸ் சச்சிதானந்த மூர்த்தி, ''அருந்ததி மற்றும் மைத்ரேய் ஆகிய திட்டங்களைத் தொடங்க எங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது, இதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு உதவுவதற்கான எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது'' எனக் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் உள்ள ஆறு கோடி மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதம் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 2018-19 காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் எச் டி குமாரசாமி இந்த திட்டத்தை அறிவித்தபோது அதற்கு ஒதுக்கப்பட்ட ரூ .25 கோடி பட்ஜெட் நிதியைப் பயன்படுத்தப் பிராமண மேம்பாட்டு வாரியம் கொண்டு வந்த சமூக திட்டங்களில் திருமணங்களுக்கான நிதி உதவி உள்ளது.

இதனிடையே எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த வாரியம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்