'குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவரை...' 'ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டு வந்து...' - அடித்து கொன்ற கிராமத்து மக்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 30 வயது நபரை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கேரகோடு காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட எஸ்.ஐ.கோடிஹள்ளி கிராமத்தில் கடந்த புதன்கிழமை 7 வயது குழந்தை வீட்டின் முன்னே விளையாடி கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த 30 வயதான மர்ம நபர் ஒருவர் அக்குழந்தையை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

அதன்பின் வீடு திரும்பிய சிறுமி தன் பெற்றோர்களிடம் நடந்தவற்றையெல்லாம் சொல்லியுள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர் மர்ம நபரை தேடி, அவரை பிடித்து அடித்துள்ளனர். சிறுமியின் குடும்பத்தார் மட்டுமல்லாமல் நடந்த சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் அனைவரும் அந்த இளைஞரை மரண அடி அடித்துள்ளனர்.

செய்தியறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பைரப்பா என அடையாளம் காணப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த வியாழக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் விசாரணையில் இதற்கு முன்பே பைரப்பா சிறிய குழந்தைகளை தொந்தரவு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்த அவரை கிராமவாசிகள் பிடித்து கடுமையான எச்சரித்துள்ளனர். தற்போது பைரப்பாவின் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரை கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்