"இந்த வருஷம்... +2 மார்க் எல்லாம் தேவையில்ல... ஜஸ்ட் பாஸ் ஆனா போதும்" - ஐஐடி 'நுழைவுத்தேர்வு' குறித்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஐஐடி (IIT) மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னணி பொறியியல் கல்வி நிறுவனமான ஐஐடி கல்வி நிலையங்களில் சேர விரும்புவோர் JEE (Advanced) தேர்வில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதேபோல், பிளஸ் 2 தேர்விலும் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், இந்த வழிமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாக ட்விட்டர் பதிவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், பல்வேறு மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு, ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ (Advanced) தேர்வு மட்டுமே தகுதியாக எடுத்துக் கொள்ளும் வகையில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு பதிலாக தேர்ச்சி மட்டும் கருத்தில் கொள்ளும் வகையில் விதியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்