சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறைப்பு!.. மத்திய அரசு அறிவிப்பு!.. ஏன்?.. விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டிவிகிதம் 4% லிருந்து 3.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்புநிதி என்று சொல்லப்படும் PPF வட்டிவிகிதம் 7.1%லிருந்து 6.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஓராண்டுகால வைப்புத்தொகைக்கான வட்டி 5.5% லிருந்து 4.4%ஆக குறைக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களின் வட்டிவிகிதம் 7.4% லிருந்து 6.5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

குறைக்கப்பட்ட வட்டிவிகிதங்கள் அனைத்தும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வட்டிவிகிதங்கள் அமல்படுத்தப்படாது என்றும், பழைய வட்டிவிகிதங்களே தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்