'உசுர' குடுத்து போராடுறாங்க... 'மருத்துவர்கள்', 'செவிலியர்'களுக்கு ஆஃபர் அறிவித்த... 'விமான' நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடு முழுவதும் கொரோனா தொற்று கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிலிருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரை கூட பயணம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ

பணியாளர்கள் கடுமையான உழைப்பை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், விமான நிறுவனமான இண்டிகோ இந்தாண்டு இறுதி வரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 25 % விமான கட்டண சலுகை வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக தீவிரமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராடி வரும் நிலையில் இண்டிகோ நிறுவனம் இந்த சலுகையை அறிவித்துள்ளது.

இண்டிகோ இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் போது இந்த சலுகை வழங்கப்படும். அதே போல அப்படி பயணிக்கும் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனையின் ஐடி-யை கொண்டு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்