VIDEO : காரிற்குள் இருந்து இறங்கி,,.. 'என்ன', 'ஏது'ன்னு கூட கேக்காம,,.. 'பெண்மணி' செய்த 'அதிர்ச்சி' செயல்,,.. திடுக்கிட வைத்த சிசிடிவி 'காட்சிகள்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், காரில் இருந்து வேக வேகமாக இறங்கி, வாட்ச்மேன் ஒருவரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சிகளில், கார் ஒன்றில் இருந்து வேகமாக இறங்கும் பெண் ஒருவர், அங்கு பணியில் இருந்த வாட்ச்மேன் ஒருவரை சரமாரியாக தாக்குகிறார். கன்னத்தில் அறைந்தும், கண்முன் தெரியாமல் அவரின் உடம்பில் தாக்கவும் செய்கிறார். அந்த வாட்ச்மேன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி கையால் தனது உடலை மறைத்து கொள்கிறார்.

இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து, மிகப் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பெண் அங்கிருந்து கிளம்பிச் சென்றவுடன் அந்த வாட்ச்மேன் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி போலீசில் புகாரளித்துள்ளார். கோர்ட் உத்தரவு வந்ததும், வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கையில், அந்த பெண் தனது தாய் அங்கு உள்ளாரா என்பது குறித்து வாட்ச்மேனிடம் ஏதோ கேட்டுள்ளார். அவர் அதற்கு பதில் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இதனால் கோபமடைந்து அந்த பெண் தாக்கியதாக தெரிவிக்கின்றனர். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்