‘7 வயது சிறுவனைக் கடத்திய 10ஆம் வகுப்பு மாணவன்’.. ‘சென்று பார்த்த போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 7 வயது சிறுவனை பணத்திற்காக கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவருடைய 7 வயது மகனான அர்ஜுன் நேற்று மாலை வீட்டிற்கு முன் விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளார். இதையடுத்து ராஜுவுக்கு ஃபோன் செய்த மர்ம நபர் ஒருவர், “உங்களுடைய மகனை நான்தான் கடத்தி வைத்திருக்கிறேன். உடனடியாக எனக்கு 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் நான் அவனை விடுவிப்பேன். இல்லையென்றால் கொன்றுவிடுவேன்” என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து ராஜு உடனடியாக போலீஸாரிடம் புகார் அளிக்க, அவர்கள் அடுத்த முறை அந்த மர்ம நபரிடமிருந்து ஃபோன் வந்ததும் அதை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அங்கு சென்று பார்த்த போலீஸார் ஒரு 14 வயது பள்ளி மாணவன் சிறுவனைக் கடத்தி வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து சிறுவனைக் கடத்திய மாணவரைக் கைது செய்துள்ள போலீஸார், இதில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

TELANGANA, HYDERABAD, BOY, KIDNAP, SCHOOL, STUDENT, MONEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்