Video: மகன் இறந்துட்டான்... 'என்னோட' 2 பேரன்களை அனுப்புவேன்... கண்கலங்க வைத்த தந்தை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகன் வீரமரணம் அடைந்து விட்டான் அதனால் என்னுடைய 2 பேரன்களை அனுப்பி வைப்பேன் என தெரிவித்து இருக்கிறார்.

நேற்றிரவு இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வீர மரணம் அடைந்த பீகாரை சேர்ந்த இந்திய வீரர் குந்தன் குமாரின் தந்தை அளித்துள்ள பேட்டி அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது. அதில், ''என்னுடைய மகன் வீர மரணம் அடைந்து விட்டான். எனக்கு இரண்டு பேரன்கள் இருக்கின்றனர். அவர்களை ராணுவத்திற்கு அனுப்பி வைப்பேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்