கால்வாயில் மிதந்த 'பெண்' குழந்தைகள் 'சடலம்'... "4 வருஷத்துல 5 'குழந்தை'ங்களும் மர்மமா தான் இறந்து போயிருக்கு",,.. 'தோண்ட' தோண்ட கிடைத்த 'அதிர்ச்சி' தகவல்!!... மனதை 'பதற' வைக்கும் 'கொடூரம்'!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹரியானா மாநிலம், திக்வாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜூமாதீன். இவரது மனைவி பெயர் ரீனா. இவர் சமீபத்தில் ஆறாவதாக கர்ப்பம் தரித்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இவரது இரண்டு பெண் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். ஒரு குழந்தைக்கு 11 வயது. மற்றொரு பெண் குழந்தைக்கு 7 வயது.

இது தொடர்பாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில், ரீனாவுடன் தூங்கிக் கொண்டிருந்த தனது 2 மகள்களையும் யாரோ கடத்திச் சென்று விட்டதாக ஜூமாதீன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது, ஜூமாதீன் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இரண்டு குழந்தைகள் காணாமல் போனதால் அவர் குழப்பத்தில் பேசுகிறார் என போலீசார் கருதியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு சிறுமிகளின் உடலும் அருகிலுள்ள சாக்கடை ஒன்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில் அவர்களின் உடலை மீட்டு போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். பின்னர், தனது இரண்டு பெண் குழந்தைகளையும், தான் கொலை செய்ததை ஜூமாதீன் கிராம பஞ்சாயத்து முன் ஒப்புக் கொண்டார். அவர்களுக்கு போதை மருந்து கொடுத்து சில நாட்களுக்கு முன் கால்வாய் ஒன்றில் வீசி சென்றதையும் தெரிவித்தார்.

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட ஜூமாதீனின் மூன்று குழந்தைகளும், மர்மமான முறையில் இறந்து விட்டனர். அதில் ஒரு மகன் தூக்கத்தில் இறந்து விட்டார் என்றும், ஒரு மகள் விளையாடும் போது இறந்து விட்டார் என்றும், இன்னொரு மகன் வாந்தியெடுக்க தொடங்கி, பின் அதன் காரணமாக உயிரிழந்து விட்டதாக ஜூமாதீன் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த கிராம மக்கள் ஜூமாதீன் மீது அதிகம் அனுதாபம் கொண்டிருந்தனர். இரண்டு பெண் குழந்தைகள் தொலைந்ததும், அந்த கிராம மக்கள் சேர்ந்து குழந்தையை தேடினர்.

ஆனால், மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக, கடந்த 2017 ஆம் ஆண்டு, ஒரு மகன் மற்றும் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த ஜூமாதீன், சில ஆண்டுகளுக்கு பின் தனது மகனை விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். தனது ஐந்து பிள்ளைகளையும், கடந்த 4 ஆண்டுகளில் அவரே கொலை செய்து நாடகமாடியுள்ளார். இதனை அறிந்த மனைவி ரீனா, குழந்தைகளை கொலை செய்த என் கணவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆறாவது முறையாக கர்ப்பமாகி உள்ள மனைவியையும், கடந்த சில நாட்களாக மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலையில் வைத்துள்ளார்.

போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், அவர் தனது பதிலை மாற்றி மாற்றி கூறிக் கொண்டிருக்கிறார் என தெரிகிறது. மனநலம் பாத்திக்கப்பட்டதன் காரணமாக தனது ஐந்து குழந்தைகளையும் அவர் கொலை செய்திருக்கலாமா என கருதும் போலீசார், மனநல மருத்துவர்கள் உதவியுடன் அவரிடம் விசாரணை நடத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்