”என் ட்ரெஸ் வாஷ் பண்ணி கொடு...” - ’மாணவி பின்னாடியே, நைசா பாத்ரூமுக்குள்ள நுழைஞ்சு...’ - 4 வருஷமா, ஆசிரியர் செய்த பாலியல் வன்கொடுமை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலத்தில் உருது மற்றும் அரபு மொழியைக் கற்க வந்த மாணவியை ஆசிரியர் ஒருவர் 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த நகாத்ரனா தாலுகா பகுதியில் இயங்கும் நாரா காவல் நிலையத்தில் 19 வயது பெண் ஒருவர், தன் ஆசிரியர் கடந்த நான்கு வருடங்களாக தன்னை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தினார் என புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படியில் தான் ஆசிரியர் செய்த கொடுமைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2015 -ம் ஆண்டு, தனக்கு 15 வயது இருக்கும் போது உருது மற்றும் அரபு மொழியைக் கற்க மதரசாவுக்கு லானா சாம்சுதீன் ஹாஜி சுலேமான் ஜாட் என்னும் ஆசிரியரிடம்   அனுப்பப்பட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து 2015-ம் ஆண்டில் ஒரு நாள் வகுப்பு முடிந்ததும் ஆசிரியர் லானா சாம்சுதீன் ஹாஜி சுலேமான் ஜாட், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தன் துணியை துவைத்து தருமாறு கூறி குளியலறைக்கு அனுப்பி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

இதுகுறித்து கூறிய பாதிக்கப்பட்ட பெண், 'எனக்கு அப்போது 14 வயது, உருது மற்றும் அரபு பயில தான் லானா சாம்சுதீன் ஆசிரியரிடம் டியூஷன் சென்றேன். ஒருநாள் அவரின் துணியை துவைத்து தருமாறு கேட்டுக்கொண்டார். நான் குளியல் அறையில் துணி துவைக்கும் போது, லானா உடனடியாக பின்னால் இருந்து வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் குறித்து எதையும் வெளியே  சொல்ல வேண்டாம் என மிரட்டினார். அப்படி சொன்னால் உன்னுடைய நற்பெயரை கெடுத்து விடுவதாகவும் என்னை மிரட்டினார்' என்று அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது திருமணம் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. பெண்ணின் கணவர் கொடுத்த தைரியத்தின் வழியே தான் தனக்கு நிகழ்ந்த இந்த கொடுமைக்கு தக்க தண்டனை வாங்கித்தர வேண்டும் என முடிவெடுத்ததாக குறிப்பிடுகிறார் பாதிக்கப்பட்ட பெண்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்