திருமணமாகி ஒரு வருஷத்துல நடந்த 'விஷயம்'... 'டவுட்'ல புருஷன் போன் செக் பண்ண 'மனைவி'க்கு காத்திருந்த 'ஷாக்',,, அதற்கு கணவர் சொன்ன பதிலால் 'சுக்கு'நூறான 'மனைவி'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலம் காந்தி நகர் என்னும் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், தனது கணவர் குறித்து அதிர்ச்சி புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

அவரது புகாரில், நூலகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் அந்த பெண், கடந்த 2011 ஆம் ஆண்டில் நபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் கணவரும் நூலகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், திருமணத்திற்கு பின் சரியாக ஒரு வருடம் வரை மிகவும் சந்தோசமாக இருந்த கணவரின்  செயலில் ஏதோ மாற்றத்தை அந்த பெண் உணர்ந்துள்ளார்.

இதன் காரணமாக, சந்தேகத்தின் பெயரில் கணவரின் மொபைல் போனை சோதித்து பார்த்த மனைவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பல ஆண்களுடன் தவறான உறவில் (Gay Relationship) ஈடுபட்டதை அறிந்து கொண்டார். இது தொடர்பாக தனது கணவரிடம் விசாரித்த போது, அவர் சொன்ன தகவல் மனைவிக்கு மேலும் இடியாக வந்து விழுந்தது. திருமணத்திற்கு முன்பு இருந்தே அவர் ஆண்களிடம் மட்டுமே ஆர்வம் கொண்டு இருந்ததாகவும், சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டி மட்டும் திருமணம் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்பதற்காக தான் உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்றும் மனைவியிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தனது தன்பாலின சேர்க்கை உறவு குறித்து யாரிடமாவது கூறினால் தன்னைக் கொலை செய்து விடுவேன் என்று மனைவியை மிரட்டியுள்ளார்.

மேலும், நூலகத்தில் பணிபுரிந்து வந்த கணவர், அங்குள்ள சில ஆண்களுடன் தவறான உறவில் ஈடுபட்டதால் அவரது வேலையும் பறிபோயுள்ளது என மனைவி புகாரில் தெரிவித்துள்ளார். வேலையிழந்த கணவர், அதன் பின் தனது ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து தவறான செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. கணவரது குணத்தை மாற்ற மனைவி பல வழிகளை செய்தும் எதுவும் பலன் கொடுக்கவில்லை. அதே போல கணவரின் குடும்பத்தினரிடம் குற்றம் சொல்லியும் அவர்கள் அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்