VIDEO: “செல்ஃபி மோகத்தால் ஆற்றுப் பாறையில் ஏறிய 2 பெண்கள்”.. நொடிப் பொழுதில் ‘எல்லாம் தலைகீழாய்’ மாறிய ‘பதைபதைப்பு’ சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வடமாநிலங்களின், பல மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருவதால் அங்கு நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. பல இடங்களில் வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பெஞ்ச் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு ஊரடங்கு அமலில் உள்ளதை பொருட்படுத்தாமல் இளம் பெண்கள் செய்த காரியத்தால் நிகழ்ந்துள்ள சோகம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துகிறது.

அங்குள்ள கிராம பகுதியை சுற்றி வந்த சில பெண்கள், ஆற்றில் குறைவான அளவில் தண்ணீர் போய்க் கொண்டிருந்த நிலையில் அங்கு நின்று செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். அவர்களுள் செல்பி எடுப்பதற்காக ஆற்றில் இறங்கிய 2 இளம்பெண்கள் நடுவில் இருந்த பாறை ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டனர்.

இதனிடையே அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சிறிது நேரத்தில் பாறை மூழ்கும் அளவுக்கு அணையின் நீர்மட்டம்

உயர தொடங்கியது. இதனைக் கண்டு பயந்து போன  மற்ற பெண்கள் உடனடியாக காவல்துறையினருக்கு அளித்த தகவலின்படி உடனடியாக அங்கு வந்த மீட்பு படையினர் கயிற்றைக் கட்டி ஆற்றில் இறங்கி பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களையும் பத்திரமாக மீட்டனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்