‘காதலனுக்காக அப்படி பண்ணிட்டேன்’.. போலீஸில் சிக்கிய இளம்பெண்.. வெளியான ‘ஷாக்’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காதலனுக்காக தனியார் ஆம்னி பேருந்தில் போதை பொருள் கடத்தி இளம்பெண் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

போதைப்பொருள் கடத்தல்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், சில தினங்களுக்கு முன்பு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மும்பை டோனி என்பவரை கைது செய்தனர். அவரிடன் நடத்திய விசாரணையில், நேற்று அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் இளம்பெண் ஒருவர் போதைப்பொருள்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆம்னி பேருந்தில் வந்த இளம்பெண்

இதனை அடுத்து விசாகப்பட்டினத்தில் குறிப்பிட்ட ஆம்னி பேருந்தை எதிர்பார்த்து போலீசார் காத்திருந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட இளம்பெண் பேருந்தை விட்டு இறங்கியதும், அருகில் நின்ற சொகுசு கார் ஒன்றில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனை அடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அந்த காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

சிக்கிய காதலர்கள்

இதனை தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாளவிகா என்ற இளம்பெண்ணும் ஹேமந்த் என்ற இளைஞரும் தங்களை காதலர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். அதில் மாளவிகா, ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் HR மேனேஜராக வேலை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

இதனை அடுத்து மாளவிகா கொண்டுவந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில், 18 மேக்ஸ் போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் போதை பவுடர் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அதனை கைப்பற்றினர்.

காதலனுக்காக கடத்திய காதலி

இதனைத் தொடர்ந்து மாளவிகாவிடம் போலீசார் விசாரித்த போது, காதலன் ஹேமந்த் கேட்டுக் கொண்டதன் பேரில் ஹைதராபாத்தில் இருந்து போதைப்பொருள் வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தில் பயணம் செய்தால் ஆபத்து என்று ஆம்னி பேருந்தில் வந்ததாக மாளவிகா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

வேறு யாருக்கெல்லாம் தொடர்பு?

தற்போது இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய செல்போன் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வேறு யார் சம்பந்தப்பட்டுள்ளர்? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலனுக்காக போதைப்பொருள் கடத்தி காதலி போலீசில் சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

GIRLFRIEND, DRUGS, VIZAG, BOYFRIEND, ARRESTED, HYDERABAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்