'இரவில்' திடீரென வெடித்துச்சிதறிய 'எரிவாயுக்குழாய்'!.. 'வழிபாட்டில்' இருந்த 17 பேர் பலியான 'சோகம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பங்களாதேஷ் நாட்டில் ஒரு மசூதியில் சந்தேகத்துக்கு உரிய வகையில் எரிவாயு குழாய் கசிந்த விபத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்த மக்களுள் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டக்காவுக்கு வெளியில் உள்ள நரயாங்கஞ்ச் மசூதியில் வெள்ளிக்கிழமை அன்று இரவில் ஏற்பட்ட விபத்திற்கு எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணம் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட 37 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஒரு குழந்தை உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்